Past Principals


Pavalar

Mr.T.A.
Thuraiappapillai

      


Mr.K.Chinnappah

 


Mr.T.Jayaratnam


Mr.M.Makadevan


Mr.P.Kumarasamy


S.Sivasubramaniam


Mr.P.
Kanagasabapathy


Mr.A.Ramasaamy


BiramaSri.K.
Rathneswaraiyar


Mr.P.Somasundaram


Mr.T.
Shanmugasuntharam


Mr.V.Kanthaiya


Mr.K.Nagaraja


Mr.P.Suntharalingam


Mrs.S.
Ananthasayanan


Mr.K.Velsivananthan

கண்ணீர்  அஞ்சலி

 

திரு.இரத்தினேஸ்வரஐயர்

இவர் மகாஜனாவின் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரும், மகாஜனக் கல்லூரியின் நீண்ட கால ஆசிரியரும், கல்லூரியில் பல பொறுப்புகளை வகித்து பின்னர் அதிபராக இருந்து ஒய்வு பெற்றவரும், எல்லோரதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தவருமான திரு இரத்தினேஸ்வர ஐயர் அவர்கள் கடந்த வியாழக்கிழமை காலை (24.05.2012) தெல்லிப்பளையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று (25.05.2012) தெல்லிப்பளையில் நடைபெறுகிறது.

இவர் மகாஜனாவில் உயர் கல்வியை நிறைவு செய்தபின் இந்தியா சென்று தனது கல்வியைத் தொடர்ந்து கலைமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். 1950 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் கல்லூரியின் ஒரு ஆசிரியராக நியமனம் பெற்றார்.ஆரம்பத்தில் உயர் வகுப்புகளுக்கு அளவையியல் பாடத்தையும் ஏனைய வகுப்புகளுக்கு வரலாறு ,குடியியல் பாடங்களையும் கற்பித்தார். இவர் அதிபர் திரு பொ.கனகசபாபதி அவர்கள் காலத்தில் உப அதிபராக பதவி உயர்வு பெற்று பின் பதில் அதிபராகக் கடமையாற்றி தொடர்ந்து அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கல்வியில் கூடிய அக்கறையும், செயற்பாடும் கொண்ட இவர், கல்வி சாரா விடங்களில் அதிக காலம் நேரம் பயன் படுத்துவதில் கட்டுப்பாடு கொண்டிருந்தார். கல்வியில்தான் மாணவர்களின் வாழ்க்கை அதிகம் தங்கியிருக்கிறதென்பதை முதன்மையாக கருதியதுடன், கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு எவ்விதமான தடங்களும் எவ்வழியாலும் நிகழக்கூடாதென்பதில் தன் காலத்தில் கவனமாக இருந்தார்.

இந்த அறிவித்தலை பழைய மாணவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் குடும்பத் துயரில் நாங்களும் கலந்து கொண்டு, எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய நாம் யாவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம். .

***********************************************************************************************

 

 

 

Our Principal T.T. Jeyaratnam’s youngest son Jeyakanthan( Kannan ),the Vice President of Mahajana College OSA Colombo passed away in Colombo, Sri Lanka on October 18th 2011.
 He was the husband of Ranji and father of Krishayini & Rajiparan and father- in-Law of Mugunthan. He was the brother of Jeyabavani (London, UK); Jeyakumaran (London, UK); Jeyavani (Bama, London, UK) and brother-in-law of Vigneswaran, Dr. Maheswaran and Yogini.
 We express our heartfelt condolence and sympathy to Mrs. Ranji Jeyakanthan and children.
Funeral arrangements:
 Viewing will be on October 19th 2011 Wednesday from 9 AM to 2 PM at Mahinda Florist Parlour, Mount Laveniya.
 Last ritual and cremation will be on Wednesday, 5 PM, October 19th 2011 at Kalkisai Cemetery.

 

 

 

 

 

 

*********************************************************************************

 

எமது கல்லூரியின்  பௌதீகவியல் ஆசிரியரான திரு.எட்வேட்கீதபொன்கலம்  ஜோன்சன்  அவர்கள்  03.03.2011 அன்று இந்தியாவில் காலமானார். அன்னாரது பிரிவால்  துயருற்றிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம் மகாஜன சமூகத்தின் சார்பில்.
Events